கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது கொரோனா வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும் என்ற கூற்றை இலங்கையை சேர்ந்த உலக புகழ்பெற்ற நோயியல் நிபுணர் மற்றும் வைராலஜிஸ்ட் பேராசிரியர் மாலிக் பீரிஸ் மறுத்துள்ளார், மேலும் இது அறிவியலற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போது ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் வைராலஜி துறையின் தலைவர் பேராசிரியராக பேராசிரியர் பீரிஸ் பணியாற்றி வருகின்றார்.
மேலும், Ebola போன்ற சில பாக்டீரியாக்களைப் போலல்லாமல் வைரஸ்கள் உயிருள்ள உயிரணுக்களில் மட்டுமே பிரதிபலிக்க முடியும் என்றார்.
வைரஸ்கள் வரையறையின்படி, ஒரு வைரஸுக்கு உயிரணுக்கள் பிரதிபலிக்க வேண்டும், ஒரு நபர் இறந்ததும், அவரது உடலில் உள்ள செல்கள் இறந்ததும் வைரஸ் இறந்துவிடும் என்று அவர் கூறினார்.
SARS நோயினை ஏற்படுத்தும் வைரஸைக் கண்டுபிடித்த முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் பீரிஸ் ஆவார்.
$ads={2}
"கொரோனா தொற்றால் இருப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக பேசிய அவர், இறந்த உடல்கள் நேரடியாக ஓடும் நீரில் புதைக்கப்பட்டால் தான் ஆபத்து, ஆனால் உடல் தரையில் இருந்து ஆறு அடி கீழே மக்க முடியாத உரையினால் நன்றாக மூடி புதைக்கப்படும் போது, அது மிகவும் பாதுகாப்பானது. ஏதேனும் வாய்ப்பால் உடம்பில் இருக்கும் எஞ்சிய வைரஸ் பல அடிகளை தாண்டி மண்ணின் வழியாக வடிகட்டி தண்ணீரில் இறங்கி உயிர்வாழ்வது மிகவும் சாத்தியமற்றது.” என்று அவர் விளக்கினார்.
உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான அறிவு தனக்கு நன்கு இருப்பதாகவும் கூறிய பேராசிரியர் பீரிஸ், கொரோனா வைரஸை அடக்கம் செய்வதன் மூலம் பரவும் என்ற கூற்று மிகவும் சாத்தியமற்றது என்றார்.
-எம்.எம் அஹமட்
English Source: http://www.newswire.lk/2020/12/15/world-renowned-virologist-prof-malik-peiris-refutes-claims-that-burials-transmit-covid-19-islan/