இலங்கையில் நான்கு கொரோனா வைரஸ் மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் நான்கு கொரோனா வைரஸ் மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி!


கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா,மொடேர்னா,பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே  இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.


நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல தெரிவித்துள்ளார்.


$ads={2}


இந்த நான்கு மருந்துகளில் இலங்கைக்கு பொருத்தமான மருந்தினை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இது குறித்த ஆவணங்களை சுகாதார அமைச்சிடமும கொவிட் 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயிடமும வழங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச்மாதமளவில் மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.