கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுகின்றமைக்கு இனவாத வைத்தியக்குழுவே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று (23) பொரளை கனத்தை மயானத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கோட்டாபய அரசாங்கம் இந்த செயற்றிட்டத்தை இன்றோடு நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.
நிபுணர்களை கொண்டதாக அரசாங்கம் கூறினாலும் அதில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் இனவாதிகளும், மதவாதிகளுமே என்று கூறியுள்ளார்.