கட்டுநாயக்க விமான நிலையம் உண்மையில் குறித்த திகதியில் திறக்கப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுநாயக்க விமான நிலையம் உண்மையில் குறித்த திகதியில் திறக்கப்படுமா?


எதிர்வரும் 26ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றை மீண்டும் திறப்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஜீ.ஏ. சந்திசிரி தெரிவித்துள்ளார்.


எனினும் அதற்கு தேவையான சூழல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக தயாரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


விமான நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பிலான ஒத்திகை ஒன்று எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை கடந்த செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த விமான பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்து தீர்வை வரியற்ற பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.