மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இன்று நடாத்தப்பட்ட 136 ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளிலிருந்து கொரோனா தொற்றாளர் அடையாளம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களுக்கு இன்று நடாத்தப்பட்ட 136 ரெபிட் எண்டிஜன் பரிசோதனைகளிலிருந்து கொரோனா தொற்றாளர் அடையாளம்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு Rapid Antigen பரிசோதனை நடத்தும் செயற்பாட்டிற்காக இன்று முதல் நாட்டின் பல பாகங்களிலும் அதற்கான வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திலிருந்து சப்ரகமுவ மாகாணத்திற்கு பயணிக்கும் போது அதன் எல்லைப்புறமான தங்ஓவிட்ட பகுதியில் இந்த நடமாடும் Rapid Antigen பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.


$ads={2}

தூர இடங்களுக்காக பஸ்களில் பிரயாணம் செய்யும் பயணிகள் குறித்த இடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

நிட்டம்புவ, மீரிகம, வேயாங்கொட பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள், மீரிகம சுகாதார வைத்திய அதிகாரிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த இடத்தில் 136 பேருக்கு இன்று Rapid Antigen பரிசோதனைகள் நடத்தப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் COVID தொற்றுக்குள்ளானவர் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.