குவைத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குவைத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்களுக்கு பூட்டு!


குவைத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களை தற்காலிகமாக அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஒன்றுகூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


$ads={2}

டிசெம்பர் 24 முதல் ஜனவரி 10 ஆம் திகதிவவரை குவைத்திலுள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும் என குவைத்தின் KUNA செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

குவைத்தில் சுமார் 650,000 – 750,000 உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சில நூற்றுக்கணக்கானோர் குவைத்தை பூர்வீகமாகக்கொண்டவர்கள். பெரும்பாலானோர் வெளிநாடுகளிலிருந்து குவைத்துக்கு வந்தவர்கள் ஆவர்.

குவைத்தில் இதுவரைர 149,017 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 926 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி செலத்தும் நடவடிக்கை குவைத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.