கண்டி- வத்தேகம பகுதியில் பாலியல் வன்புணர்விலிருந்து காப்பற்றிக்கொள்ள முயற்சித்த பெண்ணை கொலை செய்த நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி- வத்தேகம பகுதியில் பாலியல் வன்புணர்விலிருந்து காப்பற்றிக்கொள்ள முயற்சித்த பெண்ணை கொலை செய்த நபர்!

கண்டி – வத்தேகம பகுதியில் கடந்த புதன்கிழமை (23) பெண்ணொருவர் மர்மமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தேகம பொலிஸாரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தேகம – பொல்கொல்ல பகுதியைச் சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.


$ads={2}

குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக முயற்சித்த பெண்ணையே, சந்தேகநபர் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, குறித்த பெண்ணை சந்தேகநபர், கோடரியால் தாக்கி, கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தனது மனைவி காணாமல் போனமை தொடர்பில் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.