நத்தார் பண்டிகை கொண்டாடவிருந்த வீட்டில் நேர்ந்த சோகம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நத்தார் பண்டிகை கொண்டாடவிருந்த வீட்டில் நேர்ந்த சோகம்!!

ஹட்டன், ஆரியகம பகுதியில் வீடு ஒன்று தீ பற்றி எரிந்ததில் வீட்டில் இருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (24) மாலை வேளையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குடும்பத்தில் உள்ளவர்கள் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் நகரத்திற்கு சென்றிருந்த வேளை வீடு தீபற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது வீட்டில் இருந்த நபர் தீயில் சிக்கி பலியாகியுள்ளார்.

$ads={2}

பலியான நபர் 3 பிள்ளைகளின் தந்தையான 74 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியர் என ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரதேச மக்கள் தீயினை கட்டுபாட்டுக்கு கொண்டுவர முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

-சதீஸ்குமார்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.