கொழும்பு மாவட்டத்தில் மற்றொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொரொனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த லக்சந்த செவன குடியிருப்பு தொகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இன்று (24) அதிகாலை 6 மணி முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.