எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் கொரொனாவில் இருந்து மீண்டு வழமைக்கு திரும்பவுள்ள நாடு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் அக்டோபர் மாதத்துக்குள் கொரொனாவில் இருந்து மீண்டு வழமைக்கு திரும்பவுள்ள நாடு!!

எதிர்வரும் ஒக்டோபருக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவிடும் எனவும், அதன்பின்னர் இயல்பு வாழ்க்கை திரும்பும் எனவும் சீரம் இந்தியா நிறுவன இயக்குநர் அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்த்தக மாநாடு ஒன்றில் பேசிய அவர், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசிக்கு இம்மாத இறுதியில் அரசின் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

எனவே, புத்தாண்டில் இருந்து தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என நம்புவதாகவும், நாட்டு மக்களில் 20 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டவுடன், அனைத்து மக்களுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

$ads={2}

இதேவேளை, சீரம் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தங்களது தடுப்பூசி பரிசோதனையின் இறுதிக்கட்ட முடிவுகளை சமர்ப்பிக்குமாறு அரசின் தடுப்பூசிக் குழு கடந்த வாரம் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.