இறக்காமம் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பான விபரம் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இறக்காமம் பள்ளிவாயல் மீதான தாக்குதலை மேற்கொண்ட நபர் தொடர்பான விபரம் வெளியானது!


இறக்காமம் - மதீனாபுரம் பள்ளி வாசலின் கண்ணாடிகள் நேற்று (18) இரவு அல்லது இன்று அதிகாலை உடைக்கப்பட்ட சம்பவ புகைப்படங்கள் சமூக வலைகளில் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்பில் குறித்த பகுதியின் பிரதேச செயலாளர் எம்.எம். நசீர் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, குறிப்பிட்ட பள்ளிவாயலில் சமையலில் ஈடுபடும் மூவர் (முஸ்லிம்கள்) உணவு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியுள்ளது.


இதனை அடுத்து அவர்களில் ஒருவர் (சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர்) பள்ளிவாயலின் கண்ணாடிகளை உடைத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இது தொடர்பில் பொலிஸார் தன்னிடம் இவ்வாறு குறிப்பிட்டதுடன் அடுத்து குறிப்பிட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் சேதமடைந்த பகுதிகளை திருத்தி தருவதற்கு கேட்கப்பட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த எவரும் சம்பந்தப்படவில்லை என்பதையும் சில ஊடகங்களில் மற்றும் சமூக வலைகளில் வெளியாகி உள்ளது போல் இதில் மர்ம நபர்கள், அடையாளம் தெரியாதவர்கள் செய்துவிட்டு தப்பிச் சென்றது எதுவும் பதியப்படவில்லை என போலீசார் மற்றும் பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.


- பாருக் ஷிஹான்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.