நாளை முதல் கண்டி, கெலிஓயா, களுகமுவ பிரதேசம் முடக்கம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் கண்டி, கெலிஓயா, களுகமுவ பிரதேசம் முடக்கம்?

கண்டி, கெலிஓயா களுகமுவ பிரதேசத்தின் தற்போதைய நிலைமை குறித்து இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று சுகாதார அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது. அதனடிப்படையில் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கண்டி, கெலிஓயா களுகமுவ பிரதேசத்தில் புதிதாக இனங்காணப்பட்ட் 09 கொரோனா தொற்றாளர்களுடனும் முதலாம் நிலைத் தொடர்பினை பேணிய அனைவருக்கும் நாளை காலை PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 


$ads={2}

 மேற்குறித்த பரிசோதனையின் போது ஒருவருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமிடத்து முழு ஊரினையும் முடக்க நேரிடும் என்று பிரதேச வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்

எனவே வீடுகளில் இருந்து வெளியே செல்வதை முற்றாக தவிர்த்து கொள்ளுமாறு குறிப்பாக பெண்கள் மற்றும் தாய்மார்கள் வேண்டப்படுவதோடு, தொழிலுக்கு அல்லது அத்தியவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் முடிந்த அளவு சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

மேற்படி விடயங்களில் அனைவரும் பொறுப்பாகவும் ஒத்துழைப்பாகவும் நடந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் வைத்திய அதிகாரி நஸீம் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.