தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இந்த வார முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

யுக்ரேனில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ள 6 சுற்றுலாப் பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள விடயம் தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

இதன் அடிப்படையில், விசேட சுற்றுலா செயற்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகக்கூடும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்த சுற்றுலா பயண திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலைகளுக்கு தாம் முன்னதாகவே தயாராக இருந்ததாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.