அடக்கும் உரிமையை வழங்குங்கள் : நாம் முன்னின்று அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் - மொஹமட் ரஸ்மின்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடக்கும் உரிமையை வழங்குங்கள் : நாம் முன்னின்று அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் - மொஹமட் ரஸ்மின்

கொவிட்டில் மரணிக்கும் ஜனாசாக்களை அடக்கும் உரிமையையே கேட்கின்றோம். மாறாக ஈழத்தை கோரவில்லை. அனுமதி வழங்கினால் அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் நாங்கள் முன்னின்று மேற்கொள்வோம் என சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பின் துணைத் தலைவர் மொஹமட் ரஸ்மின் தெரிவித்தார்.

கொவிட்டில் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து பொரளை கனத்தைக்கு முன்னால் நடத்திய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


$ads={2}


அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட்டில் மரணிப்பவர்களை தகனமும் செய்யலாம் , அடக்கமும் செய்யலாம் என உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருக்கின்றது. அதேபோன்று இந்த தொற்றில் இருந்து பாதுகாக்க உலக சுகாதார அமைப்பு வழிகாட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தது. அதன் பிரகாரமே அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் ஒரு மீட்டர் இடைவெளியை பேணவேண்டும் என்ற நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

அவ்வாறு இருக்கும்போது, அதே உலக சுகாதார அமைப்புதான் கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்யவும் அனுமதித்திருக்கின்றது. உலக சுகாதார அமைப்பின் அனைத்து வழிகாட்டல்களையும் பின்பற்றும் அரசாங்கம் ஏன் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் பின்பற்றுவதில்லை என கேட்கின்றோம். அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் களங்கம் ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கத்தின் முட்டாள் தனமான தீர்மானத்தினால் உலகில் பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எனவே நாங்கள் ஈழத்தை கேட்டு போராடவில்லை. ஜனநாயக உரிமையான அடக்கம் செய்ய அனுமதிக்குமாறே கோருகின்றோம். அரசாங்கம் மனித உரிமைக்கு மதிப்பளித்து இதற்கான அனுமதியை வழங்கவேண்டும். அதற்காக எந்த நிபந்தனைகளை விதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். அடக்கம் செய்ய அரசாங்க ஊழியர்கள் அச்சப்படுவதாக இருந்தால் அதனை நாங்கள் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் முன்னின்று மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம் என்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.