மா அரைக்கும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கி உயிரிழந்த பெண்! வெலிக்கந்தை பகுதியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மா அரைக்கும் இயந்திரத்தில் கூந்தல் சிக்கி உயிரிழந்த பெண்! வெலிக்கந்தை பகுதியில் சம்பவம்!

தனது வீட்டில் சுயதொழிலுக்காக பொருத்தப்பட்டுள்ள மா அரைக்கும் இயந்திரத்தில் தவறுதலாக கூந்தல் சிக்கிக் கொண்டதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் வெலிக்கந்தை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில் வெலிக்கந்தை மஹிந்தாகம கடவத்தமடு கிராமத்தில் வசிக்கும் சந்திரிகா (39) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

$ads={2}

வழமைபோன்று இவர் மா அரைப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவரது கூந்தல் தவறுதலாக மா அரைக்கும் இயந்திரத்தில் சிக்கியுள்ளது. அதனால் அவர் இயந்திரத்தினால் பலமாகச் சுழற்றப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.