பண்டிகை காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாடு? - இராணுவ தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பண்டிகை காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாடு? - இராணுவ தளபதி


பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


பண்டிகை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.


எனினும் எதிர்வரும் நத்தார் பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் போது வார இறுதியில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


$ads={2}


மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுவதனை முடிந்தஅளவு குறைத்துக் கொள்ளுங்கள் என இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.