முஸ்லிகளின் மனதை காயப்படுத்தும் இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்! -அசாத் சாலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிகளின் மனதை காயப்படுத்தும் இலங்கை அரசாங்கம் மீது சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும்! -அசாத் சாலி


முஸ்லிம்களின் மனங்களை காயப்படுத்த இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றாளர் இறக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதாகவும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.


சர்வதேச தொலைக்காட்சி ஒன்றின் இணையத்தளத்தின் ஊடாக அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


$ads={2}


கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.


தற்போதைய இலங்கை அரசாங்கம் சிறுபான்மை இனத்தவரை காயப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பின் வழிக்காட்டுதல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறி வருகிறது எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.