சுகாதார சேவை பணிப்பாளரின் அறிவித்தலை மீறி ஜனாஸா ஒன்று தகனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுகாதார சேவை பணிப்பாளரின் அறிவித்தலை மீறி ஜனாஸா ஒன்று தகனம்!


கேகாலை, யடியன்தொட கராகொடை பகுதியை சேர்ந்தவரும் கன்னத்தோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட அல் ஹாஜ் ரவுப்தீன் (ரவ்ஸான் ஹாஜியின் தந்தை) காலமாகி கரவனல்ல வைத்தியசாலையில் வைக்கபட்டிருந்தார்.


இந்நிலையில் இன்று (21) குறித்த நபர் பலாத்காரமாக தகனம் செய்யப்பட்டுள்ளார்.


$ads={2}


இந்தச் செய்தியை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிகால் பாருக் உறுதிப்படுத்தினார்.


கொரோனா தொற்றினால் மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை எரிக்காமல் குளிரூட்டிகளில் பாதுகாத்து வைக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஏற்கனவே அறிவித்திருந்தும் இவ்வாறு ஜனாஸா எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.