மாவனெல்லை பிரதேசத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாவனெல்லை பிரதேசத்தில் பாரியளவு வெடிபொருட்கள் திருட்டு!

மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து திருப்பட்டதாக கூறப்படும் வெடிபொருட்களை கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படும் மாவனெல்ல-மொல்லியகொட கற்பாறை உடைக்கும் இடத்தின் உரிமையாளர் இது தொடர்பில் டிசம்பர் 22 ஆம் திகதி பொலிஸில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.


$ads={2}

இந்த விவகாரம் குறித்து கேகாலை மாவட்ட செயலாளர் மற்றும் சபரகமுவ மாகாண ஆளுநருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களில் 15 கிலோகிராம் அமோனியம் நைட்ரேட், 750 கிராம் வோட்டர்-ஜெல் வெடி, 20 டெட்டனேட்டர்கள் மற்றும் 35 மீட்டர் டெட்டனேட்டர் தண்டு ஆகியவை அடங்குகின்றன.

இந்தநிலையில் குறித்த இடத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உட்பட சுமார் 30 பேர் இதுவரை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு கண்டியின் வட்டபுலுவவில் உள்ள மகாவலி உயானவின் நடைபாதையில் அமைந்துள்ள மதச்சிலை ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.