எச்சரிக்கை - பெண்களே உங்கள் தங்க ஆபரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை - பெண்களே உங்கள் தங்க ஆபரணங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

இலங்கையின் பல பகுதிகளில் தங்க சங்கிலி கொள்ளையடிக்கும் புதிய கும்பல் ஒன்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெண்களை இலக்கு வைத்து மாலை நேரங்களில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெறுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்று நாட்டின் பல பகுதிகளில் சங்கிலி கொள்ளையடிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.


$ads={2}

அனைத்து சம்பவங்களுக்கும் பெண்களே முகம் கொடுத்துள்ளனர். மாலை நேரங்களில் தங்க நகை அணிந்து செல்லும் பெண்கள் அவதானமாக செயற்பட வேண்டும்.

மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் விலாசம் கேட்பது போன்று நடித்து சங்கிலிகளை பறித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமையான வீதிகளில் நடந்து செல்லும் பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல்லவதனை தவிர்ப்பது நல்லதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.