மஹியங்கனை பகுதியில் பெய்த மீன் மழை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹியங்கனை பகுதியில் பெய்த மீன் மழை!


மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் (21) மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வந்த வரட்சியுடனான காலநிலையைத் தொடர்ந்து பெய்த மழையின் போது இவ்வாறு மழை நீருடன் மீன்களும் தரையில் வீழ்ந்துள்ளன.


மழையுடனான காலநிலையுடன் சிறிய அளவிலான புயல் காற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}


சிறிய அளவிலான புயல் காற்று நீர்நிலைகளுக்கு அருகாமையில் செல்லும் போது ஒர் சிறிய வால் போன்றதொன்று உருவாகும் எனவும், அதன் ஊடாக நீர் உறிஞ்சப்பட்டு மேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறு உறிஞ்சப்பட்டு எடுத்துச் செல்லப்படும் நீருடன் மீன்களும் அள்ளுண்டு செல்லும் எனவும், இவையே பின்னர் மழை பெய்யும் போது நீருடன் மீன்களும் விழக்காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.