கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்த பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள யோசனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவை இலங்கையில் கட்டுப்படுத்த பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் அரசிடம் முன்வைத்துள்ள யோசனை!


எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தைத் தனிமைப்படுத்தவும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்தவும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருக்கிறது.


பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்மேளனம் இந்த யோசனையை அரசாங்கத்திடம் முன்வைத்திருக்கிறது.


கொழும்பு மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையை அடுத்தே இந்த யோசனை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.


$ads={2}


தற்போதைய நிலையில் கொரோனா வைரசின் தாக்கம் மேல் மாகாணத்திலிருந்து ஏனைய இடங்களுக்கும் பரவுவதற்கான ஏதுக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


நத்தார் மற்றும் புதுவருட காலத்தை ஒட்டி மக்கள் ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குச் செல்லும்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.


எனவே எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரை மேல் மாகாணத்தைத் தனிமைப்படுத்தவும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சம்மேளன செயலாளர் கோரிக்கையை விடுத்துள்ளார் .


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.