அம்பாறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான மீன்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அம்பாறையில் கரையொதுங்கிய நூற்றுக்கணக்கான மீன்கள்!

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் இரு தினங்களாக இறந்த நிலையில் அதிகளவில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளன.

இப் பிரதேசத்தில் கடந்த 3 நாட்கள் பெய்த கடும் மழையின் பின்னர் நேற்றில் இருந்து இவ்வாறு இறந்த நிலையில் கலப்பு மீன்கள் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

$ads={2}

திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு கலப்பு மீன்கள் அதிகளவில் கரையொதுங்கி காணப்படுவதுடன், மீன்கள் அனைத்தும் இறந்து அழுகிய நிலையில் காணப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு கரையொதுங்கிய மீன்களை நாய் மற்றும் காகங்கள் இரைக்காக தூக்கி செல்வதுடன், அப்பிரதேசமெங்கும் துர்நாற்றமும் வீசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் உட்பட்ட பலர் நிலைமைகளை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.