வாடகைக்குப் பெற்ற வாகனத்தை ஒரு இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்த நபர் கைது! கண்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாடகைக்குப் பெற்ற வாகனத்தை ஒரு இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்த நபர் கைது! கண்டியில் சம்பவம்!

வாடகைக்கு பெற்றுக் கொண்ட கார்களை உரிமையாளர்களுக்கு  ஒப்படைக்காமல் அவற்றை வேறு நபர்களிடம் அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டு வந்தார் என்ற சந்தேகத்தில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்துக்கு  கடந்த திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய  அநுராதபுரம் குற்றப்புலனாய்வு பிரிவினர் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதற்கமைய   புதன்கிழமை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

$ads={2}

கண்டி பகுதியைச் சேர்ந்த சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பிறிதொரு நபரிடம் 70 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்றுக் கொண்டுள்ளார். அந்த காரை உரிய காலத்தில் உரிமையாளரிடம் ஒப்படைக்காமல், மோசடி செய்து வந்ததாக காரின் உரிமையாளர் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.  சந்தேக நபர் வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட காரை அநுராதபுரம் – விஜயபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரினால் இவ்வாறு வாடகை அடிப்படையில் பெற்றுக் கொண்டு அடகு வைக்கப்பட்ட மேலும் நான்கு கார்களையும் கைப்பற்றியுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

-செ.தேன்மொழி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.