கொரோனா வைரஸிற்கான உள்நாட்டு மருந்து என அடையாளப்படுத்தப்படுகிற பானம் நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை கண்டுபிடித்த ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டார என்பவர் இதனை கூறியுள்ளார்.
இதுவரை அரசாங்கத்திடம் இருந்து இதற்கான எழுத்துமூல அனுமதி கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தவுடன் அரச ஒசுசல ஓடாக விநியோகிக்க திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.