ஜனாஸாக்கள் எரியூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸாக்கள் எரியூட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


$ads={2}

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே உமது பலத்தை சிறுபான்மையின் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடலங்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு, இலங்கை அரசே ஜனாசாக்களை எரிக்காதே, ஜனாசாக்களில் இன வாதம் வேண்டாம் என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.