கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் இலங்கை அரசாங்கம் மலிவான இலகுவான வழிமுறைகளை தேடுகின்றது என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தின் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நம்பகதன்மை மிக்கவையில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
$ads={2}
அரசாங்கம் சரியான விடயங்களை செய்வதற்கு பதில் இலகுவான மலிவான வழிமுறைகளை முன்னெடுக்க முயல்கின்றது எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் அனுமதி வழங்காத ஆயுர்வேத மருந்தினை அரசாங்கம் ஊக்குவிக்கின்றது பொதுமக்கள் அதன் பின்னால் செல்கின்றனர் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.