கொரோனாவுக்கு பயந்து வாகனம் வாங்கிய இளைஞன் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவுக்கு பயந்து வாகனம் வாங்கிய இளைஞன் பலி!

குருணாகல் பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பேருந்தில் தொழிலுக்கு செல்வதற்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த இளைஞன் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.

பணி நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.


$ads={2}

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் கொள்வனவு செய்து மூன்றாவது பயணத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.