முதலில் எனது கழுத்தினை அறுத்து இறைச்சி தொழிற்சாலை ஆரம்பியுங்கள்! -மேர்வின் சில்வா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலில் எனது கழுத்தினை அறுத்து இறைச்சி தொழிற்சாலை ஆரம்பியுங்கள்! -மேர்வின் சில்வா


உலக நாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக் கூடியவாறான தொழிற்சாலை ஒன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிய முடிகிறது.


இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு மகா சங்கத் தேரர்கள் ஒருபோதும் அனுமதியளிக்கக்கூடாது என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.


$ads={2}


கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 


அங்கு அவர் மேலும் கூறியதாவது,


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அவ்வாறிருக்கையில் உலக நாடுகளுக்கு விலங்குகளின் இறைச்சியை விநியோகிக்கக் கூடியவாறான தொழிற்சாலை ஒன்று சுதந்திர வர்த்தக வலயத்தில் செயற்பாடுகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறியமுடிகிறது.


தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு உதவிய மகாசங்கத் தேரர்கள் இதுகுறித்து அவதானம் செலுத்த வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இந்த பௌத்த பூமியில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்படக்கூடாது.


இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். மாறாக இது நிறுத்தப்படாவிட்டால், தொழிற்சாலை செயற்பட ஆரம்பிக்கும் முதலாவது நாளில் விலங்கு ஒன்றுக்குப் பதிலாக நான் எனது தலையைப் பலிகொடுப்பேன். முதலில் எனது கழுத்தை அறுத்து இந்தத் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.


-நா.தனுஜா


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.