பெண்ணுடன் செல்பி எடுத்த ஜனாதிபதிக்கு சுமார் ரூ. 6.5 லட்சம் அபராதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெண்ணுடன் செல்பி எடுத்த ஜனாதிபதிக்கு சுமார் ரூ. 6.5 லட்சம் அபராதம்!


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கொரோனா நோயை கட்டுப்படுத்த இன்னும் பல நாடுகளில் தடுப்பூசி அமலுக்கு வரவில்லை என்பதால் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை உள்பட ஒருசில நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியே வருவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தது மட்டுமின்றி இளம் பெண்ணுடன் கடற்கரையில் செல்பி எடுத்த ஒரு நாட்டின் அதிபருக்கு சுமார் ஆறறை லட்சம் ரூபாய் (3,500$) அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

$ads={2}

சிலி நாட்டின் அதிபர் செபாஸ்டியன் பைனரோ என்பவர் சமீபத்தில் கடற்கரைக்கு வாக்கிங் சென்று இருந்தபோது திடீரென ஒரு இளம்பெண் அவரிடம் வந்து செல்பி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இதனை அடுத்து சிரித்துக்கொண்டே அந்த பெண்ணுக்கு செல்பி புகைப்படத்திற்கு அதிபர் பைனரோ போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையிலும் மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

அதிபர் பைனரோ இது குறித்து விளக்கம் அளித்த போதிலும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிபர் பைனரோவுக்கு 3,500 டாலர்கள் அபராதம் விதித்தனர். இந்த தொகை இலங்கை மதிப்பில் சுமார் ரூ.6.5 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு நாட்டின் அதிபராக இருந்தாலும் மாஸ்க் அணியாமல் செல்பி எடுத்த காரணத்தால் அவருக்கே அந்நாட்டின் சுகாதாரத்துறை அபராதம் விதித்து இருப்பது பெரும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.