கண்டி - கம்பளை, கெலிஓயா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திடீர் பூட்டு! முற்றாக முடக்கப்படுமா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - கம்பளை, கெலிஓயா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திடீர் பூட்டு! முற்றாக முடக்கப்படுமா?

kandy gampola gelioya

கண்டி மாவட்டத்தின் கம்பளை நகரில் கடை கடையாக சென்று தமது நிறுவன பொருட்களை விநியோகிக்கும் பிரபல பிஸ்கட் நிறுவனம் ஒன்றின் விற்பனை முகவர் ஒருவர் சில தினங்களுக்கு முன் அங்கு வந்து சென்றுள்ளார்.


பின்னர் அவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி கம்பளை, வெலிகல்ல, கெலிஓயா மற்றும் பிலிமத்தலாவ போன்ற பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் பூட்ட நேற்று (28) மாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


$ads={2}


அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளின் இயங்குகின்ற சில்லறை வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற அனைவரையும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.


பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்யாமல்  வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த வர்த்தக நிலையங்கள் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.