விமான நிலையங்களை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விமான நிலையங்களை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பான விசேட அறிவித்தல்!

எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் நாட்டின் விமான நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (28) யுக்ரேன் நாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்படி, வணிக ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

$ads={2}

அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதன் காரணமாக புதிய கொரோனா கொத்தணி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்களில் இருந்து அவர்கள் வெளியேறியதன் பின்னர், குறித்த ஹோட்டல் பணியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து நாட்டு மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கோ கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ரஷ்ய சுற்றுலா வலயத்தில் இருந்து 2,580 பயணிகள் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.