அடக்கம் செய்ய அனுமதித்தால் உடலை தோண்டி எடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள்! -மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அடக்கம் செய்ய அனுமதித்தால் உடலை தோண்டி எடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள்! -மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர்

ஒரு நாடு ஒரே சட்டத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதாக உறுதியளித்த பின், எவரினதும் விருப்பத்தின் பிரகாரம் நாட்டை ஆட்சி செய்யாமல், மக்களின் ஆணைப்படி நாட்டை ஆள வேண்டும் என்று சிங்களே அமைப்பின் தலைவர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் உடல்கள் அடக்கம் செய்யப்படக் கூடாது எனக் கோரி நேற்று (28) ஜனாதிபதி செயலகம் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

$ads={2}

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

இஸ்லாமிய தீவிரவாதிகளால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட இந்த நாட்டில், 
குறித்த சஹ்ரானின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் புதைக்கப்பட்ட கொரொனா தொற்றிய சடலங்களை தோண்டியெடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள் என்றார்.

மேலும், இந்த விடயம் தொடர்பாக துறவிகளை வீதிக்கு இறங்க வேண்டிய நிலைக்கு தள்ளிய இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் தோல்விக்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் உடலை அடக்கம் செய்வதா இல்லையா என்பது அரசாங்கத்திற்கு தெரியும் என்ற விடயம் தனக்குத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஓரே நாடு ஒரே சட்டம் என்று இருந்தால், மதத்திற்கு ஏற்றபடி சட்டங்களை மாற்றியமைக்க முடியாது, அப்படி நடந்தால், நல்லாட்சி சிறப்பாக இருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

-எம்.எம் அஹ்மட்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.