இலங்கை போக்குவரத்து சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை போக்குவரத்து சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் பேருந்து சேவையை முழுமையாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


$ads={2}

இதன்படி, தூரப்பிரதேச பேருந்துகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் முழுமையாக முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது தினசரி வருமானத்தின் 25 வீதமான அளவை மாத்திரமே தற்போது இலங்கை போக்குவரத்து சபை பெற்றுக் கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, park and ride முறையிலான போக்குவரத்து சேவையும் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.