இலங்கை சர்வதேச விமான நிலையங்களை எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் மீண்டும் திறப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் உபுல் தர்மதாச அறிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் உள்ள கட்டுநாயக்க, மத்தலை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வணிக மற்றும் சார்ட்டர் விமானங்கள் இயக்க அனுமதிக்கப்படும் என்றார்.
$ads={2}
மேலும் இந்த நடவடிக்கையின் பின்னர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் பின்னர் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கையை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் திறப்பதற்கான நிரந்தர திகதிகளை அடுத்த சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.