நீதி அமைச்சைரின் கட்டிட மாற்ற தீர்மானத்தில் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதி அமைச்சைரின் கட்டிட மாற்ற தீர்மானத்தில் மாற்றம்!


நீதி அமைச்சை தனியார் கட்டிடம் ஒன்றுக்கு மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


பல கலந்துரையாடல்களின் பின்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.


பல கோடி ரூபாய் செலவில் நீதியமைச்சை தனியார் கட்டடம் ஒன்றுக்கு மாற்றுவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சியினர் அண்மையில் கருத்து வெளியிட்டதை அடுத்து, நீதி அமைச்சு தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.


எவ்வாறிருப்பினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குமாக அதிகரிக்கப்பட்ட 14 நீதியரசர்களுக்கான சேவைகளை வழங்குவதற்காக அமைச்சை பயன்படுத்துவது தொடர்பில் உயர்நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் முகாமைத்துவ சபையும், நீதிச்சேவை ஆணைக்குழுவும் யோசனை முன்வைத்திருந்ததாக நீதி அமைச்சு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


இதற்கமைய, உயர்நீதிமன்றத்தினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினதும் ஒரு பகுதியை நீதி அமைச்சில் நிறுவுவதற்கும், நீதி அமைச்சை வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்படி, இரண்டு வருட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு 9.8 மில்லியன் ரூபாவை செலுத்தி, நீதி அமைச்சை கொழும்பு உலக வர்த்தக மையத்தில் ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


தேக்கமடைந்துள்ள பெருமளவான வழக்குகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள கட்டடத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து, பயனுள்ள சேவையை வழங்குவதற்கான நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் , வேறு அர்த்தங்களை கற்பிக்க முயற்சிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில் நீதி அமைச்சை தற்போது இருக்கின்ற கட்டிடத்திலேயே முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேநேரம், புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 13 தளங்களைக்கொண்ட கட்டடத்தை சோதனையிடுவதற்காக பொது சட்டத்தரணிகள் சங்கத்தின் குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.


இதன்போது கருத்து தெரிவித்துள்ள சட்டத்தரணிகள், பாரிய செலவில் தனியார் கட்டடம் ஒன்றுக்கு நீதி அமைச்சு கொண்டுசெல்வதற்கு பதிலாக, இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.