பேருந்துகளில் செல்வோர் கவனத்திற்கு - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருந்துகளில் செல்வோர் கவனத்திற்கு - பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

பேருந்துகளை சோதனையிடும் நடவடிக்கைகளில் சாதாரண உடை அணிந்த பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்காக சுமார் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பின்பற்றுகின்றனவா மற்றும் சாரதிகள் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைக் கண்டறிய இந்த பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பேருந்துகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் சில பேருந்துகள் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் இந்த நடைமுறை செயற்படுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.