இன்று விமான விபத்தில் உயிரிழந்த விமானி தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று விமான விபத்தில் உயிரிழந்த விமானி தொடர்பாக வெளியான மேலதிக தகவல்!

திருகோணமலை – கந்தளாய் சூரியபுர எனும் பகுதியில் முறிந்து விழுந்த விமானத்தில் பயிற்சி விமானி உயிரிழந்ததாக இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


கேகாலையை சேர்ந்த அமரகோன் என்கிற பயிற்சி பெற்றுவரும் விமானியே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படைத் தளபதி எயார் மார்சல் சுதர்சன பத்திரண தெரிவித்தார்.


$ads={2}


இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை விமானப்படையில் இணைந்திருந்ததுடன் அதே வருடத்திலேயே பயிற்சி விமானியாக தனது பயணத்தை ஆரம்பித்திருந்தார்.


இந்நிலையில், சீனக்குடா விமானத் தளத்திலிருந்து இன்று (15) பிற்பகல் 1.05 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பிற்பகல் 1.15 அளவில் விமானக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பினை குறித்த PT-6 ரக விமானம் இழந்த நிலையில் விபத்துக்கு உள்ளானது.


அதனையடுத்து அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.