உப கொத்தணி உருவாகும் நிலை இல்லையேல் தனிமைப்படுத்தல் நிலை அகற்றப்படும்! பொலிஸ் மா அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உப கொத்தணி உருவாகும் நிலை இல்லையேல் தனிமைப்படுத்தல் நிலை அகற்றப்படும்! பொலிஸ் மா அதிபர்


தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உப கொத்தணிகள் உருவாகும் நிலை இல்லை என்பதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியவுடன் கொரோனா தடுப்பு பணிக்குழு தனிமைப்படுத்தல் நிலையை அகற்றும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


மேலும் இதுவரை கொழும்பில் ஒன்பது பொலிஸ் பிரிவுகள் மற்றும் 25 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


$ads={2}


இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் குறிப்பாக தொடர்மாடிகளில் விரைவான அன்டிஜென் சோதனைகள் நடத்தப்படுகின்றன. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். முடிவுகளை பகுப்பாய்வு செய்யும் சுகாதார அதிகாரிகள் உப கொத்தணிகளின் நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்தினால் கொரோனா தடுப்பு பணிக்குழு அனைத்துப் பகுதிகளின் தனிமைப்படுத்தலையும் அகற்றும் என தெரிவித்தார்.


இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரை 1,256 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.