நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கண்டி மாவட்டத்தின் தொலுவ மற்றும் உடுதும்பர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், மாத்தளை மாவட்டத்தின் எலஹெர பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் இதனை அறிவித்துள்ளது.
$ads={2}