வெற்றிலை எச்சில் பிரயோகத்திற்கு ஆளான இருவருக்கு நடந்த சோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெற்றிலை எச்சில் பிரயோகத்திற்கு ஆளான இருவருக்கு நடந்த சோகம்!


கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தலுக்காக ஏற்றிச்சென்ற பஸ்ஸிலிருந்து தொற்று ஏற்பட்ட பெண் ஒருவர் வெற்றிலை எச்சிலைத் துப்பிய நிலையில் எச்சில் விழுந்த இருவர் உட்பட அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


கொழும்பிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் சிலர் அண்மையில் விசேட பஸ் மூலம் பலங்கொடை சமனலவெவ பகுதியிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


$ads={2}


இதன்போது பலங்கொடை கல்தொட்டை, மிரிஸ்வத்த பகுதியில் வைத்து அந்த பஸ்ஸின் ஜன்னலைத் திறந்த கொரோனா தொற்றுடைய பெண் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை வெளியே துப்பியுள்ளார்.


பஸ் அருகே பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் மீது இந்த வெற்றிலை எச்சில் மழையாக தூறியதை அடுத்து பொதுசுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப் பெற்று தற்சமயம் வீடுகளில் அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.