எரிக்கப்படும் ஜனாஸாக்கள் தொடர்பாக இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிக்கப்படும் ஜனாஸாக்கள் தொடர்பாக இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம்!


கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்ற அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் அவை அடக்கம் செய்யப்படுகின்றன.


எனவே.  இந்த தருணத்தில் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் முஸ்லிம் தலைவர்களுடன் கலந்தாலோசித்து ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நியாயமான முடிவை எட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


$ads={2}


இன்று (19) கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவில் ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கொரோனா தாக்கத்தினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் தொடர்பில் கால தாமதமின்றி ஒரு இறுதி தீர்மானத்துக்கு வருவது மிக முக்கியமாகும்.


இறந்த உடலங்களை புதைப்பதனால் வேறு எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பது வைத்திய நிபுணர்களின் நிலைப்பாட்டிலிருந்து புலப்படுகிறது. மேலும் எவருக்கும் வேறு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்கின்ற அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளிலும் உடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன.


முஸ்லி ம் சமூகத்தின் மத கோட்பாடுகளுக்கமைய இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மறுப்பதானது அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அச்செயல் தொடர்ந்தும் நீடிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.