பாடசாலைகளில் இடைவேளை நேரத்தை அதிகரிக்க வேண்டும்! -விளையாட்டு அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளில் இடைவேளை நேரத்தை அதிகரிக்க வேண்டும்! -விளையாட்டு அமைச்சர்


பாடசாலை இடைவேளை நேரத்தை குறைந்தது மேலும் 15 நிமிடங்களாவது அதிகரிக்க விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார்.


இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், மாணவர்களது கல்வி மற்றும் விளையாட்டு இரண்டையும் சமப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கருத்து தெரிவித்தார்.


$ads={2}


மேலும் நாட்டில் அறிவார்ந்த விளையாட்டு வீரர்களின் பற்றாக்குறையை அவர் வலியுறுத்தினார்.


"பாடசாலை இடைவேளை நேரத்தை குறைந்தபட்சம் மேலதிகமாக இன்னும் 15 நிமிடங்களாவது நீட்டிப்பதற்கான சாத்தியத்தை நோக்குமாறு நான் கல்வி அமைச்சருக்கு பரிந்துரைத்தேன், இதனால் மாணவர்கள் இந்த கூடுதல் நேரத்தை மைதானத்தில் செலவிட முடியும்.

இது ஏனைய பாட நேரங்களில் இருந்து தலா 2 நிமிடங்கள் ஒதுக்குவதன் மூலம் சாத்தியமாகும்.” என அமைச்சர் மேலும் கூறினார்.


-எம்.எம் அஹமட்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.