கொரோனா மருந்து கோரி தம்மிக்க பண்டாரவின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மருந்து கோரி தம்மிக்க பண்டாரவின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்!

கொரோனா வைரசிற்கு மருந்து கண்டிப்பித்ததாக கூறப்படுகின்ற கேகாலையை சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இல்லத்திற்கு முன் நேற்று (18) மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இதன்போது ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போலி தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் இருந்ததால் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்களது வீடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காணவர்கள் இருப்பதால் அவர்களுக்கு மருந்து கோரியே இவ்வாறு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என தெரிவிக்கப்படுகிறது.

$ads={2}

இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் இடையே கொரோனா தொற்றுக்கு உள்ளானர்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் தம்மிக்க பண்டாரவின் மருந்து இதுவரை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மீளறிவிப்பு வரும் வரை மருந்தை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதென தம்மிக்க பண்டாரவின் வீட்டின் வாயிலில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.