மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய கண்டி பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய கண்டி பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!


மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை  ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தின் எஸ்.சி.ஐ.யூ. எனப்படும் விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கட்டுகஸ்தோட்டை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


பிரதான பொலிஸ் பரிசோதகரான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி செலுத்திய கார், கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் குருணாகல் – கண்டி பிரதான வீதியின் யட்டிவாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


$ads={2}


குறித்த பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்க கூறினார்.


இந்த விபத்து தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.எம்.எஸ். உச்சித்த சிறியின் மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவின் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.


-எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.