நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்தாரா? சற்றுமுன் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா செய்தாரா? சற்றுமுன் விளக்கம்!


இன்று 'தி லீடர்' இணையதளத்தின் வெளியான நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதம் கையளிப்பட்டதாக வெளியான தகவலில் எந்தவித உண்மை தன்மையும் இல்லையென தெரிவித்துள்ளார்.


$ads={2}


தமது உத்தியோக பூர்வ பேஸ்புக் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


அமைச்சு பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து விலகும் வகையில், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நீதி அமைச்சர் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் நோக்குடன், நீதி அமைச்சர் இவ்வாறு இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எவ்வாறாயினும், நீதி அமைச்சரின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிலையிலேயே, குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் அலி சப்ரி மறுப்பு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.