கேகாலை பகுதியில் தம்மிக பண்டார அறிமுகப்படுத்திய மருந்துக்கான காப்புரிமையைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு போஷாக்கு நிறைந்த உணவு நிரப்பியாக இந்த மருந்தை வழங்க ஆயுர்வேத துறை
மற்றும் சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு குழு
அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.
மேலும் இந்த மருந்து குறித்து மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.