அறிவியல் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்! மூட நம்பிக்கையால் அல்ல! மங்கள சமரவீர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அறிவியல் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்! மூட நம்பிக்கையால் அல்ல! மங்கள சமரவீர

அறிவியல் மூலமே நாட்டையும் சமூகத்தை முன்னேற்ற முடியும் எனவும் மூட நம்பிக்கைகளால் முன்னேற்ற முடியாது எனவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மூட நம்பிக்கைகளை அடிப்படையாக கொண்டு முன்னேறிய நாடுகள் எதுவும் உலகில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று (13) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நபர்களை அடக்கம் செய்யாது தகனம் செய்வது தொடர்பாக எதிர்க்கவில்லை.

$ads={2}

எனினும் மக்களின் மத நம்பிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்வதில் எந்த ஆபத்தும் இல்லை என அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் இஸ்லாம் மதத்தினருக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்காமல் இருப்பது சிக்கலுக்குரியது. அடிப்படைவாதிகள் சிலரது மூட நம்பிக்கைகளை பிடித்துக்கொண்டு, சிறிய தரப்பினரின் தேவைகளுக்காக இஸ்லாம் மதத்தினரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்காமல் இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.