நாட்டை நேசிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார்கள்! -டக்ளஸ் உறுதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டை நேசிக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த காரியத்தை செய்திருக்க மாட்டார்கள்! -டக்ளஸ் உறுதி

நீதிமன்ற எரிப்பின் ஊடாக குற்றவாளிகளை பாதுகாக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் விரும்பி இருக்க மாட்டார்கள் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (17) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நீதிமன்றத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

விசாரணைகளின் பின்னர் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும். ஏனெனில் இதை ஜனாதிபதியும் பிரதமரும் விரும்பியிருக்கமாட்டார்கள்.

$ads={2}

ஏனெனில் அவர்கள் தாங்கள் எந்த அளவிற்கு இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள், அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் கடந்த 15ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.