நேற்றைய கொரோனா நிலவரம் - தமிழில் முழு தொகுப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய கொரோனா நிலவரம் - தமிழில் முழு தொகுப்பு

நேற்றைய தினம் 22 மாவட்டத்தில் 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் 228 பேர் , அவிசா வெல்லப் பகுதியில் 99 பேர், கருவாதோட்ட பகுதியில் 29 பேர், கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் 26 பேர் மற்றும் மருதானை பகுதியில் 21 நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 108 பேர் நேற்றைய தினம் அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் 49 பேர் மற்றும் நீர் கொழும்பு சிறைச்சாலையில் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள னர்.

கடவத்தை பகுதியில் 50 பேர், களுத்துறை மாவட்டத்தில் 68 பேர், கண்டி மாவட்டத்தில் 40 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 18 பேர், இரத்தினபுரி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தலா 17 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


$ads={2}


காலி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 15 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்தில் 11 பேர், அனுராதபுர மாவட்டத் தில் 09 பேர், கேகாலை மாவட்டத்தில் 07 பேர், மாத்தளை மாவட்டத்தில் 06 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 05 பேர் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பேர், வவுனியா மாவட் டத்தில் 02 பேர், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 02 பேர், முல்லைத்தீவு, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மொன ராகலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவரும் நேற் றைய தினம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 639 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 29 ஆயிரத்து 882 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்குள்ளான 8 ஆயிரத்து 573 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.